டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

கோவை: டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அதிக சுங்கக் கட்டண வசூல் ஆகியவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.


கோவை: டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அதிக சுங்கக் கட்டண வசூல் ஆகியவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.



கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் வடகோவையில் இன்று நடைபெற்றது. 

அதில், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் குமாரசாமி பேசியதாவது :- மத்திய அரசைக் கண்டித்து வரும் 20-ம் தேதி காலை 6 மணி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதில், கோவை லாரி உரிமையாளர்கள் திரளாக பங்கேற்றமுடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சுமார் 10,000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.



டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, சுங்கவரி கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறவுள்ளது. 

விரைவில் டேங்கர் லாரிகள், கண்டெய்னர்கள், மினி ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க ஆதரவு தர உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

மேலும், வரும் 20ம் தேதியன்று தங்களுக்கு ஆதரவாக ஒருநாள் மட்டும் பொதுமக்களும் தங்களது வாகனங்களை இயக்காமல் ஆதரவு தர வேண்டும்.' என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தால், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...