வரும் 17-ம் தேதி முதல் திருப்பூர் - கோவை இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 17, 23, 26 ஆக., 02 மற்றும் ஆக., 04 ஆகிய தேதிகளில் சேலம்-கோவை பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், வரும் 17-ம் தேதி கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.25 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கிளம்பும். 

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

மேலும், வரும் 19-ம் தேதி மங்களூரூ ரயில்நிறுத்தம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஷாலிமார் - திருவனந்தபுரம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

இதேபோல, வரும் 23-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

26-ம் தேதி ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். இதேபோல, கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். 

வரும் 28-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:-

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

இதேபோல, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், பாட்னா - எர்ணாகுளம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

30-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

இதேபோல, சென்னை எழும்பூர் - மங்களூரூ சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

02-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

04-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - இந்தூர், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை சுமார் 15 நிமிடங்கள் பீளமேடு ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...