குண்டும், குழியுமான சாலைகளை தி.மு.க., எம்.எல்.ஏ., நா. கார்த்திக் ஆய்வு

கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.

கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம், 8,59,62 வார்டு சாலைகள் மற்றும் வசந்தாமில் வரையில் உள்ள திருச்சிச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யாமல் உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



இதனிடையே, மோசமான நிலையில் உள்ள சாலைகளை, இன்று காலை தி.மு.க., கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் நடந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி தரைப்பாலத்தையும் அவர் பார்வையிட்டார்.

இது குறித்து நா. கார்த்திக் கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...