தூய்மை பாரதம் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை: கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 'தூய்மை பாரதம் பசுமை பாரதம்' என்ற நிகழ்ச்சி, அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 'தூய்மை பாரதம் பசுமை பாரதம்' என்ற நிகழ்ச்சி, அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலைத் தூய்மையாக பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களிடம் விளக்கப்பட்டது. தொடர்ந்து, தூய்மை பாரதம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபரணங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, தூய்மை பாரதம் பசுமை பாரதம் உறுதிமொழி மாணவர்களால் ஏற்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் பேசுகையில், “தேசிய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் கோவை 16-வது இடத்தில் உள்ளது. அடுத்த வருடம் நடத்தப்படும் ஆய்வில் முன்னிலை பெற பொதுமக்களின் ஒத்துழைப்பும், மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். எனவே, பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி வளாகம், வீடு ஆகியவற்றைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூய்மையின் முக்கியத்துவம் குறித்து உங்களின் நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்,” என்றார்.



தொடர்ந்து, அவர் பேசுகையில், “துப்பரவு எனும் மகத்தான பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள உயிருக்கு ஆபத்தான பாதாள சாக்கடையில் இறங்குதல், உபகரணங்கள் இல்லாமல் துப்பரவு பணிகளை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதுகுறித்த புகார்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும்,,” என்றார். 



பின்னர், பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று தூய்மை பாரதம் மற்றும் தடை செய்யப்பட்ட துப்புரவு பணிகள் குறித்த நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...