பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி தோல் கொடையாளிகளுக்கு பாராட்டு விழா

கோவை: தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி கங்கா மருத்துவமனையின் சார்பில் தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை: தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினத்தையொட்டி வரும் 15-ம் தேதி கங்கா மருத்துவமனையின் சார்பில் தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தீக்காயங்களால் பாதிக்கப்படுபவர்களுக்காகவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் அவர்கள் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். உடலில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்கள் ஏற்படுபவர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. இதற்காக, இரத்த வங்கிகளைப் போலவே, தோல் வங்கி (Skin Bank) தேவைப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கங்கா மருத்துவமனையில் தோல் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டது. 

இது குறித்து தீக்காயங்களுக்கான மைக்ரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறை மருத்துவர் ராஜா சபாபதி கூறுகையில், " ஒருவர் உயிரிழந்தவரிடத்தில் இருந்து 6 மணிநேரத்தில் தோலை தானமாகப் பெற வேண்டும். மேலும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தோல் தானம் செய்யலாம். கண்தானம் செய்யும் ஒவ்வொருவரும், தோல் தானம் செய்யலாம்," என்றார். 

இதுவரை 150-க்கும் மேற்பட்ட தோல் கொடையாளிகள் இருப்பதாகவும், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான தோல் வங்கியாக கங்கா மருத்துவமனை செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதுடெல்லி, மணிப்பால், ஜாம்ஷெட்பூர் மற்றும் பெங்களூரூ போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தோல்களை அனுப்பப்பட்டுள்ளது. 

தோல் தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜுலை 15-ம் தேதி 'தேசிய பிளாஸ்டிக் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தோல் கொடையாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பாராட்டும் விழா கங்கா மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கா மருத்துவமனையின் அரங்கில் 15-ம் தேதி காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...