ஆத்துப்பாலத்தில் பெயர் பலகை அங்கீகாரம் பெற்ற நொய்யல் ஆறு : சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கோவையின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது நொய்யல் ஆறாகும். அழிவின் பாதைக்கு சென்று, மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ள இந்த ஆறு, தற்போது பெய்யும் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. சிறுவாணி மலை அடிவாரத்தில் உருவாகும், இந்த ஆறு பேரூர் வழியாக ஆத்துப்பாலத்தை கடந்து பாய்கிறது. இந்த நிலையில், நொய்யல் ஆற்றை செழிப்பாக மாற்ற உதவிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆத்துப்பாலம் அருகே 'நொய்யல் ஆறு' என்ற பெயர் பலகையைப் பொருத்த கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையைப் பொருத்தியது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆத்துப்பாலத்தின் பெயரை, 'நொய்யல் ஆத்துப்பாலம்' என மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...