கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் 4-வது முறையாக 250 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் நான்காவது முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

கோவை: கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் நான்காவது முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.



தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தாமஸ் வீதி பகுதியில் வாகாராம் என்பவர் சிறிய அறை ஒன்றை எடுத்து, ஊதுபத்தி குடோனாக பயன்படுத்துவதாகக் பயன்படுத்தி வந்துள்ளார். 

ஆனால், அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விநியோகம் செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குட்கா, பான்மசாலா, போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது :- சுமார் 250 கிலோ எடையுடைய குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கக்கூடும். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கல்களைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.

கடந்த 20 நாட்களில் மட்டும் கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் மூன்றரை டன் எடையுடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...