மாணவிகளை தகாத வார்த்தைகளில் வசைபாடும் தலைமையாசிரியர் : சுயமரியாதைக்காகப் போராடிய மாணவிகள்

கோவை: கோவையில் தலைமை ஆசிரியை மாற்றக் கோரி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் தலைமை ஆசிரியை மாற்றக் கோரி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை மாநகராட்சியின் கீழ் எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களாகவே மாணவிகளின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், தகாத வார்த்தைகளில் திட்டுவதாக தலைமை ஆசிரியர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பள்ளியில் புதிதாக சேர்ந்திருக்கும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'வரவேற்பு விழா'விற்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் மாணவிகள் திட்டமிட்டிருந்தனர். 

ஆனால், இதற்கு தலைமையாசிரியர் மல்லிகா மறுப்பு தெரிவித்ததுடன், தனக்கு கட்டுப்படவில்லை எனில், மதிப்பெண்களை குறைத்து விடுவோம் உள்ளிட்ட பல்வேறு மிரட்டல்களையும் விடுத்ததாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பிறந்த நாளுக்காகப் பூ வைத்து வந்த மாணவியை, இழிவான வார்த்தைகளில் திட்டி சக மாணவிகள் முன்னிலையில் தலைமையாசிரியர் மல்லிகா அசிங்கப்படுத்தியுள்ளார். இதனால், தலைமையாசிரியர் மீது மாணவிகள் அதிருப்தியில் இருந்தனர்.

மேலும், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடு, நாப்கின்களை மாணவிகளே கைகளில் எடுத்து அப்புறப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் மாணவிகள் சந்தித்து வந்துள்ளனர். அதோடு, கட்டணக் கொள்ளை, இரசீதின்றி கட்டணம் பெறுதல், மாணவிகளுக்கு வழங்க வேண்டிய தின்பண்டங்களில் முறைகேடு, ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு பிரச்சனைகளும் அந்தப் பள்ளியில் நிலவி வருவது தெரிய வந்துள்ளது.



இது தொடர்பாக மாநகராட்சி கல்வி அதிகாரி (பொறுப்பு) ரவி மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் பானுமதி ஆகியோரை மாணவிகள் நேரில் சந்தித்து பலமுறை இது தொடர்பாக முறையிட்டுள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், பள்ளித் தலைமையின் மெத்தனப் போக்கு மற்றும் மாணவிகளை தகாத வார்த்தைகளில் திட்டுவதைக் கண்டித்தும், தலைமையாசிரியரை உடனே மாற்றக் கோரியும் மாணவிகள் கடந்த 2 நாட்களாகப் பள்ளி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். 

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவிகள் இன்று பள்ளி வளாகத்தின் வெளியே உள்ள கண்ணுசாமி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி கல்வி அதிகாரி (பொறுப்பு) ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தலைமையாசிரியர் மல்லிகாவை உடனடியாக மாற்ற வேண்டும் என மாணவிகள் வலுவான கோரிக்கையை அவர்களிடம் முன்வைத்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...