கோவை - பொள்ளாச்சி இடையிலான அரசு பேருந்துகளில் கட்டணம் அதிகரித்து வசூலிப்பதாகப் புகார்

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ., தூரம் வரை சுற்றி வர வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயணிகளிடம் அரசுப் பேருந்து நிர்வாகம் ரூ. 3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரண கட்டணமாக ரூ. 25-ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ. 33-ம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண பேருந்துகளில் ரூ. 28 வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு குறித்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் நம்மிடம் கூறுகையில், "வியாழக்கிழமை கட்டண உயர்வு இருந்தது. இன்று அது இல்லை. அதேசமயம், சில பேருந்துகளில் மட்டும் இந்தக் கட்டண உயர்வு உள்ளது. தனியார் பேருந்துகளில் இது இல்லை," எனக் கூறினர். 

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்ட போது, பேருந்துகளில் கட்டண உயர்வு ஏற்றப்படவில்லை, என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...