கோவை கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் பயிற்சிக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.



கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு கலைமகள் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, கல்லூரி கட்டிடத்தின் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவதற்கும் மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளர் பிடித்து தள்ளியதில், 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவி லோகேஸ்வரி, முதல் மாடியில் உள்ள ஸ்லாப்பில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்லூரியில் நடந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய பயிற்சியை தாங்கள் நடத்தவில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் :- கோவையில் மாணவி பலியான செய்தியுடன் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளது. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஒரு உயிரை இழந்திருக்கிறோம். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், கோவை கல்லூரியில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அங்கு பயிற்சி அளித்தவர் எங்களிடம் முறையாகப் பயிற்சி பெற்றவர் இல்லை, இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...