அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பொதுக்கழிப்பறையை பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், பாலசுந்தரம் செட்டியார் சாலை மகளிர் பாலிடெக்னிக் அருகில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளது. இந்த நவீன பொதுக்கழிப்பிடத்தின் பணிகள் முடிவுற்றுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



நவீன பொதுக் கழிப்பிடத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் கை கழிவுமிடங்களில் தண்ணீர் வசதிகள், மின் விளக்குகள் சரியாக செய்யப்பட்டுள்ளதையும், நவீன கழிப்பிடத்தின் வளாகத்தில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையாளர் கே.ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...