மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு

சென்னை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


சென்னை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை, தமிழில் 24 ஆயிரம் பேர் எழுதினர். அதில் தமிழில் கேட்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு வினாவுக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டனர். இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலையும் வெளியிட உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கெனவே வெளியிடப்பட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இரண்டாம் கட்ட நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 16-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால், இரண்டாம்கட்ட கலந்தாய்வை தமிழக அரசு நிறுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு உத்தரவு வரும் வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...