கோவையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் படுகாயம்

கோவை இருகூர் பிரிவு அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த19 பேருக்கும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: இருகூர் பிரிவு அருகே ஆமினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 19 பேருக்கும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருகூர் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் குப்பம் என்ற பகுதியில் இருந்து கேரளா மாநிலத்திற்கு முருகன் டிராவல்ஸ் என்ற ஆமினி பேருந்து சென்று கொண்டு இருந்தது.



இந்நிலையில், முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை முந்த முயன்ற பேருந்து போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரு பெண்கள் உட்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.



விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டு கேரளாவிற்கு திரும்பி சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், கவிழ்ந்து கிடந்த பேருந்தை கிரேன் உதவியுடன் தூக்கினர்.



இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பைப்பாஸ் சாலையில் போட்டி போட்டு வாகனம் ஓட்டுபவர்களின் அஜாக்கிரதையே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...