கோவை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த விவகாரம் : அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. 

மேலும், வருகின்ற 31-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை அனைத்துக் கட்சிகள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, வருகின்ற 20 முதல் 23-ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கோவை மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டம் குறித்து பேசினாலே கைது செய்வோம் என மாநகராட்சி அடக்குமுறையை கடைபிடிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...