உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலக சுற்றுலா தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டத்திற்கு தனி இடம் உள்ளது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சுற்றுலா தலங்களில் பல்வேறு சிறப்பம்சங்களை ஏற்பாடுகள் செய்வது வழக்கம். மாவட்டத்தில் நிலவும் இரண்டு கால நிலைக்கேற்ப சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்று, ஏப்ரல்-மே மாத காலத்தில் முதல் சீசனாகவும். மற்றொன்று செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசனாகவும் மாவட்டத்தில் நிலவி வருகிறது.



தற்போது மாவட்டத்தில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், காட்டேரி பூங்கா போன்ற சுற்றுலா ஸ்தல பகுதிகளை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



குறிப்பாக மாவட்டத்தில் அதிகப்படியான சுற்றுலா பயணிகளைக் கவரும் அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக 7,500 தொட்டிகளில் பிரான்ஸ் மேரி கோல்டு, பேன்சி மற்றும் லூப்பின் போன்ற மலர் செடிகள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...