கோவையில் போலீஸ் வாகனம் மோதி கணவன் பலி; மனைவிக்கு தீவிர சிகிச்சை

கோவை: குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதி கணவர் பலியானார். மனைவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கோவை: குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் மோதி கணவர் பலியானார். மனைவிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் சாமலாபுரத்தை சேந்தவர் நடராஜன். இவரும் இவருடைய மனைவி தேவியும் கணியூர் சுங்கச்சாவடி வழியாக இரு சக்கர வாகனத்தில் ஒருவழிப்பாதையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர்படுத்திவிட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் அவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தம்பதிகள் இருவரும் படுகாயமடைந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள், விபத்துக்குள்ளானவரை காப்பாற்ற சுங்கச்சாவடி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் நடராஜனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். ஆனால், நடராஜன் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

ஆபத்தான  சூழலில் இருந்த தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...