நீலகிரியில் தொடர்கிறது தென் மேற்கு பருவ மழை: விடாமல் துரத்துகிறது மின்வெட்டு

நீலகிரி: நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரியில் தொடர் மழை காரணமாக ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் இங்கு மே மாத இறுதியில் தொடங்கும் தென் மேற்கு பருவ மழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.



இந்த மழையின் காரணமாக மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகளான குந்தா, அப்பர் பவானி, கெத்தை, பைக்காரா போன்ற அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயரும். இந்த நீர் இருப்பைக் கொண்டு சுமார் 833 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.



இதில் நீலகிரி மாவட்டத்திற்கு 76 மெகா வாட் மின் பயன்படுத்தப்பட்டு மீதமுள்ள 757 மெகா வாட் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் 833 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், உதகை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் மூன்று நாட்களுக்கும் மேலாக மின் வெட்டு அதிகரித்து வருவது உள்ளுர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

பருவ மழைக் காலங்களில் மின் தேவையை பொது மக்களுக்கு சீராக வழங்க மின் வாரியம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...