பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை செப்டம்பர் மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியையும், அவர் தன்னை செல்போனில் பேசத்தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் கைது செய்தனர். மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.
இவர்கள் 3 பேரையும் மூன்று மாதங்களுக்கு மேலாக காவலில் எடுத்து விசாரித்தும், இதில் தொடர்புடைய உயரதிகாரிகள் யார்..? என்ற விவரத்தைப் போலீசாரால் வெளிக் கொண்டுவர முடியவில்லை. மாறாக, கைதான மூவர் தொடர்பான ஆவணங்களை தயாரிக்கும் பணியிலேயே ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இன்னும் இந்த வழக்கு நகரவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
இந்த நிலையில், நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆறாவது முறையாக மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலாதேவி மீதான வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்யவும், முதல்கட்ட குற்றப்பத்திரிகையை வரும் 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சி.பி.சி.ஐ.டி.,க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.