மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: துணைத் தலைவராக ஞானசம்பந்தன் நியமனம்

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நிறுவனருமான கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நிறுவனருமான கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து, அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி வீதம் கமல்ஹாசனால் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணை தலைவராக கு.ஞானசம்பந்தனும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக அருணாச்சலம், கட்சியின் பொருளாளராக சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



மேலும், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைக்கப்படுகிறது. உயர்நிலைக்குழுவில் இருந்தவர்கள் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார் மவுரியா, குமரவேல், சவுரிராஜன், தங்கவேலு, மூர்த்தி உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் கட்சி அங்கீகாரம் கிடைத்த பின், முதல் முறையாக கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்று உள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...