கோவையின் வெவ்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது

கோவை: மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கோவை: மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி, பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது.

இந்த வழக்குகளில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க கோவை மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் (குற்றப்பிரிவு) மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அன்பரசு மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சங்கிலி பறிப்பு தொடர்பாக வாகன தணிக்கை மற்றும் விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், தனிப்படையினர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் இரண்டு பெண்களிடம் நகை பறித்ததுச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காளப்பட்டி சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு காரில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

இதில் இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போத்தனூர் இட்டேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரது மகன் ஷாஜகான் (20), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (27), என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கோவை பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டதுடன் குமரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து புதிய காரை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் விசாரித்ததில் ஷாஜகான் நகை திருடுவதில் கில்லாடி என்பதும், அவர் மீது கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல ரகு வீடு புகுந்து திருடுவதில் கைதேர்ந்தவராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் ஒரு சொகுசு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடைய மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...