கூடலூர் பகுதியில் தொடர் கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கனமழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ மழையும் தேவாலாவில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக,  ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த சாலையைச் சீரமைத்தனர்.

மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் மழை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...