திருப்பூரில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.

நிகழச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் தாமரைக்கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.

இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதனைஅடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

தகவலறிந்த ஊத்துகுளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...