மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா: அடிப்படைத் தேவைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 17-ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது. 



27-வது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்தின் போது, தற்போது ராஜ கோபுர பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் குண்டம் இறங்க வசதிகளாக எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், குண்டம் திருவிழா நிகழ்வின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் அடிப்படைத் தேவைகளான குடி தண்ணீர், கழிப்பறை, மருத்துவம், தடையில்லா மின்சாரம் என அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் வனப்பகுதியினை ஒட்டி கோவில் அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன எல்லைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தி வன பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தவும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...