2-வது நாளாக நிரம்பி வழியும் பில்லூர் அணை : 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக இருப்பதால், அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 98 அடிக்கும் மேலாக உயர்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரிநீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டு, அதன்மூலம் விநாடிக்கு 14,000 கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் முதலே பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், சிறுமுகை பகுதி வழியே ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பவானிசாகர் அணையைச் சென்றடைகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளாக உள்ள லிங்காபுரம், காந்தபள்ளம், புதுக்காடு, மொக்கைமேடு, அம்மன்புதூர், பெதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரடபட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.



இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கியதால், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வாழை விவசாயிகள் பெரும் இழப்பில் சிக்கி தவிக்கின்றனர். அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியோடு, வாழை சாகுபடி செய்துள்ள பல லட்சம் வரை கடன் பெற்று வாழை பயிரிட்ட நிலையில், இவையனைத்தும் ஒரே இரவில் நீருக்கு இறையாகியிருப்பது விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...