உதகையில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் மற்றும் சேகரிப்பு மையம் திறப்பு

நீலகிரியில் ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.

நீலகிரி: நீலகிரியில் ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்தக் கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். 



கடந்த 2013-ம் ஆண்டு சட்டசபையில் 110-ம் விதியின் கீழ், மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரூ. 25 லட்சம் செலவில் ரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேகரிப்பு மையம் உருவாக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



தமிழகத்தில் 341 ரத்த வங்கிகளும் 519 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 5 ரத்த வங்கிகளும், 3 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. முதன்முறையாக உதகை தலைமை மருத்துவமனையில் 10 ரத்தக் கூறுகள் பிரிப்பு சேமிப்பு மையத்தில் செயல்பட உள்ளது. இந்தக் கூறுகள் பிரிப்பு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் FFP (Fresh Frozen PLaSMa) ஆகிய மூன்றும் ஒரு யூனிட் இரத்தத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனித்தனியே சேமிக்கப்பட்டு மூன்று விதமான நோயாளிகளுக்கு செலுத்தி உயிர் காக்க முடியும். 



நீலகிரி மாவட்டத்தில் ஒருவருடத்திற்கு சராசரியாக 2,500 முதல் 3,000 யூனிட் வரை ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...