தொடர் மழையினால் 2-வது நாளாக நிரம்பி வழியும் சிறுவாணி அணை

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை இந்த மாதத்தில் 2-வது முறையாக நிரம்பி வழிகிறது.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை 2-வது நாளாக நிரம்பி வழிகிறது.  



கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, நேற்று காலை 10 மணிக்கு அதன் மொத்தக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதனால், கோவை மாநகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் மழை நீடித்ததால், 2-வது நாளாக சிறுவாணி அணை மீண்டும் அதன் கொள்ளளவை கடந்து பாய்ந்து வருகிறது. இதன்மூலம், அடுத்த 6 மாத காலத்திற்கு கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது என்பது உறுதியாகியுள்ளது. இதேபோல, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால், சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் 15 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

கோடை காலமான ஜுன் மாதத்தில் 300 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. தற்போது, பருவ மழை தொடங்கியுள்ளதால், கூடுதல் மழைப் பொழிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...