நீலகிரி, வால்பாறையின் சுற்றுவட்டாரப் பகுதியின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம்

கோவை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.



கோவை : நீலகிரி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழையினால், நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 136 மி.மீ. மழை பெய்துள்ளது. 



நீரார் அணையில் மழையின் அளவு 155 மி.மீ., ஆகும். அணைக்கு விநாடிக்கு 1.050.81 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 722.69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோலையாறு அணையில் 164 மி.மீ., மழை பெய்துள்ளது. நீர்மட்டம் 164.55 (160) அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 5,543.87 கன அடியாக உள்ளது. விநாடிக்கு 7,855.32 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சேடல் வழியாக 4.389.98 கனஅடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 622.92 கனஅடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் என 2 வழியாக மின் உற்பத்திக்குப்பின் கேரளா செல்கிறது. அணை பாதுகாப்பு கருதி மெயின் ஷட்டர் திறக்கப்பட்டு 679.98 கனஅடி வெளியேற்றப்படுகிறது.



இதேபோல, கேரள மற்றும் கர்நாடக மாநில எல்லையையொட்டி நீலகிரி மாவட்டம் அமைந்திருப்பதால், ஆண்டுதோறும் தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். எனவே, இந்த ஆண்டும் எதிர்பார்த்ததைவிடத் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் சற்று அதிகரித்தே உள்ளது. மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆதாரமாக மற்றும் மின் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ள அணைகளின் நீர் இருப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மழையின் நிலவரம் குறித்து தற்போது காணலாம்.

அணைகளின் நீர் இருப்பு : (மொத்த அளவுநீர் இருப்பு)

குந்தா - 89அடி86அடி, 

கெத்தை - 156அடி150 அடி 

எமரால்டு - 184 அடி133 அடி, 

அவலாஞ்சி - 171 அடி146 அடி, 

அப்பர் பவானி - 210அடி147அடி, 

பார்சன்ஸ் வேலி - 58அடி48அடி, 

போர்த்திமந்து - 130அடி115அடி,

 பைக்காரா - 100அடி84அடி, 

முக்கூர்த்தி - 18அடி14அடி, 

சாண்டினல்லா - 49அடி44அடி,

கிளன்மார்கன் - 33அடி28அடி,

மாயார் - 17அடி14அடி

நீலகிரி மாவட்ட மழை அளவு :

உதகை - 17.2 மி.மீ, 

நடுவட்டம் - 58 மி.மீ, 

கல்லட்டி - 18.1 மி.மீ., 

கிளன்மார்கன் - 62 மி.மீ,

குந்தா - 14 மி.மீ.,

கெத்தை - 4 மி.மீ.,

எமரால்டு - 31 மி.மீ., 

அவலாஞ்சி - 100 மி.மீ., 

கின்னக்கொரை - 2 மி.மீ., 

அப்பர் பவானி - 144 மி.மீ., 

குன்னூர் 5 - மி.மீ., 

பர்லியாறு 8 - மி.மீ., 

கேத்தி 8 - மி.மீ., 

கோத்தகிரி - 5 மி.மீ., 

கோடனாடு - 8 மி.மீ., 

கூடலூர் - 78 மி.மீ., 

தேவாலா - 107 மி.மீ., 

மொத்தம் - 669.3 மி.மீ., 

சராசரி - அளவு 39.37 மி.மீ.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...