நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழியும் சிறுவாணி அணை

கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது.


கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது. 



மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களிலும், தென் மேற்கு பருவ மழையின் போதும் எதிர்பார்த்ததை விட கூடுதலான மழை பெய்தது. இதனால் கோவையைச் சுற்றியுள்ள நீராதாரங்கள் நிரம்பின.

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையும் கடந்த 2-ம் தேதி அதன் முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. இன்னும் பத்து நாட்களில் அணை நிரம்பி வழியும் என்று அன்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்த சூழலில், சிறுவாணி அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 10 மணியளவில் அணை அதன் முழு கொள்ளளவையும் தாண்டி நிரம்பி வழிந்தது. 

இதன் மூலமாக, அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையானது கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின் தற்போது நிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர், பில்லூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...