கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது.
கோவை: கோவை மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நடப்பு ஆண்டில் முதன் முறையாக நிறைந்து வழிகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த மே, ஜூன் மாதங்களிலும், தென் மேற்கு பருவ மழையின் போதும் எதிர்பார்த்ததை விட கூடுதலான மழை பெய்தது. இதனால் கோவையைச் சுற்றியுள்ள நீராதாரங்கள் நிரம்பின.
கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையும் கடந்த 2-ம் தேதி அதன் முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. இன்னும் பத்து நாட்களில் அணை நிரம்பி வழியும் என்று அன்றே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சூழலில், சிறுவாணி அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 10 மணியளவில் அணை அதன் முழு கொள்ளளவையும் தாண்டி நிரம்பி வழிந்தது.
இதன் மூலமாக, அடுத்த 6 மாதங்களுக்கு கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறுவாணி அணையானது கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின் தற்போது நிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீர், பில்லூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.