நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் இதமான காலநிலையும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்யும் பருவ மழையின் தாக்கத்தினால் மாநில எல்லையோர பகுதியான நீலகிரி மாவட்டம் இந்த மழைப் பொழிவைப் பெறுகிறது. இந்த சூழலில் தேவாலா பகுதியில் நேற்று 42 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல, அவலாஞ்சியில் 44 மி.மீ., கூடலூரில் 27 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் 236 மி.மீ., மழை பதிவானது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழை, இன்று மாலை நேரம் முதல் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், குளிரின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், வெளியூர்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
