நீலகிரியில் பரவலான மழை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையினால், சுற்றுலாத்தலங்களைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.



நீலகிரியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் இதமான காலநிலையும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் பெய்யும் பருவ மழையின் தாக்கத்தினால் மாநில எல்லையோர பகுதியான நீலகிரி மாவட்டம் இந்த மழைப் பொழிவைப் பெறுகிறது. இந்த சூழலில் தேவாலா பகுதியில் நேற்று 42 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல, அவலாஞ்சியில் 44 மி.மீ., கூடலூரில் 27 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் 236 மி.மீ., மழை பதிவானது. 



இந்த நிலையில், கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பெய்த மழை, இன்று மாலை நேரம் முதல் பெய்ய தொடங்கியுள்ளது. இதனால், குளிரின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், வெளியூர்களில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...