தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பில்லூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்வு

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டின் நடுவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது பில்லூர் அணை. இவ்வணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரள வனப்பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 85 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து, அணையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்காக பவானி ஆற்றில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...