திருப்பூர்: திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தத் தண்ணீர் தொட்டியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மநபர்கள் குழாயின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உடனடியாக சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தத் தண்ணீர் தொட்டியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மநபர்கள் குழாயின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உடனடியாக சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்