கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கான பணியிடங்களைப் பறிக்கும் அதிகாரிகள்..?

கோவை: கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக பணியமர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கோவை: கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக பணியமர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் அருகே சிறுவாணி பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2009-ம் ஆண்டு முதல் வனத்துறையின் சார்பில் இயற்கை சுற்றுலாவிற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இங்கு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பழங்குடியினர் உள்பட சீங்கபதி, சாடிவயல் மற்றும் வெள்ளப்பதி உள்ளிட்ட குக்கிராமங்களைச் சேர்ந்தவர்களை வைத்து இயற்கைச் சுற்றுலாக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்தக் குழுவே, கோவை குற்றாலத்தில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பழங்குடியின மக்கள் அல்லாது வெளியில் இருப்பவர்கள் 22 பேர் சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது, பழங்குடியின மக்களுக்கு ஒருநாளைக்கு ரூ. 275 முதல் ரூ. 285 வழங்கப்பட்டு வரும் நிலையில், வெளியாட்களுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 13,000 வரை வழங்குப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இந்த சூழலில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பரலிக்காடு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு இயற்கை சுற்றுலாப் பகுதியில் 60 பணியிடங்களில் பழங்குடியின மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இதேபோல, இயற்கைச் சுற்றுலாக் குழுவின் தலைவரை தேர்வு செய்வதிலும் விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது, குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித தேர்தலும் நடைபெறவில்லை. எனவே, ஒரே நபர் 10 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வருகிறார்.

 

மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும் என அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தகுதியுடைய இளைஞர்களுக்கும் வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளையே வழங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, பழங்குடியின சமுதாயத்தினரை முன்னேற்றும் வகையில், இயற்கை சுற்றுலாவிற்கென ஒதுக்கப்பட்ட ரூ. 77.70 லட்சத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 



இதனிடையே, சட்டவிரோத நியமனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...