கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த மூன்று வாரங்களாக பள்ளி உடைமைகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக புகார் அளித்தும் சூலூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தீ வைப்பு சம்பவங்களை தடுக்கக் கோரி, அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை எரிந்து நசமானதாகவும், இந்த தீவைப்புகளினால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த மூன்று வாரங்களாக பள்ளி உடைமைகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக புகார் அளித்தும் சூலூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தீ வைப்பு சம்பவங்களை தடுக்கக் கோரி, அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை எரிந்து நசமானதாகவும், இந்த தீவைப்புகளினால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
