கோவையில் பள்ளி உடமைகளுக்கு தீ: தடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை: சூலூர் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி உடைமைகளுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க கோரி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த மூன்று வாரங்களாக பள்ளி உடைமைகளுக்கு தீ வைக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக புகார் அளித்தும் சூலூர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 



இந்நிலையில், தீ வைப்பு சம்பவங்களை தடுக்கக் கோரி, அப்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தீ வைக்கப்படுவதால், புத்தகங்கள், சீருடைகள்  உள்ளிட்டவை எரிந்து நசமானதாகவும், இந்த தீவைப்புகளினால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும், பள்ளிக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...