கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது சங்க நிர்வாகிகள் பேசுகையில், "தங்களது கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் 12-ம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம்," என அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது சங்க நிர்வாகிகள் பேசுகையில், "தங்களது கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் 12-ம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம்," என அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
