27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகின்றது. 



இந்த நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது சங்க நிர்வாகிகள் பேசுகையில், "தங்களது கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் 12-ம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம்," என அவர்கள் தெரிவித்தனர். 



இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...