தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறு தானிய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. மேலும், மானாவாரி பயிராகவும், ஊடு பயிராகவும் விவசாயிகள் தானிய உற்பத்தி செய்து வந்தனர். இவ்வாறு விளைவிக்கும் சிறு தானியங்களான ராகி, சோளம், கம்பு, மக்காச்சோளம், அவரை, துவரை ஆகியவற்றிற்கு தற்போது உரிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள், வேதனையடைந்துள்ளனர்.



இதனால், சிறுதானியங்கள் உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் சூழல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மக்காச்சோளம், கம்பு, சோளம் ஆகிய செடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அதில் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் 50 ஆயிரம் வழங்க வேண்டும், விளைவிக்கும் சிறுதானிய பயிர்களை அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...