கனவு ஆசிரியர் விருது: புறக்கணிக்கப்படும் சிறப்பாசிரியர்கள்

கோவை: இந்தாண்டு முதல் புதியதாக அறிவித்துள்ள கனவு ஆசிரியர் விருதில் விதிமுறைகளை மீறி விருது வழங்கப்படவுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் இதில் புறக்கணிக்கப்படுவதாகவும் கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கோவை: இந்தாண்டு முதல் புதியதாக அறிவித்துள்ள கனவு ஆசிரியர் விருதில் விதிமுறைகளை மீறி விருது வழங்கப்படவுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் இதில் புறக்கணிக்கப்படுவதாகவும் கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ஆண்டுதோறும் நல் ஆசிரியர் விருது வழங்குவது போல், இந்தாண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள இளம் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.



ஆனால், இந்தாண்டு வழங்கப்படவுள்ள விருதில் அந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் கலை ஆசிரியர் நலச்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.



இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார் கூறுகையில், "கனவு ஆசிரியர் விருதிற்கு சிறப்பாசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள இளம் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக இவ்விருது அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் விதிமுறைகளை மீறி தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கும், பணி அனுபவம் அதிகம் உள்ள ஆசிரியர்களுக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

முன்னதாக விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அந்த விண்ணப்ப படிவம் கூட தரப்படவில்லை. அதன் பின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கேட்ட போது இயக்குனர் அறிவிப்பின் படி விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்.

இதனிடையே, திடீரென எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் கோவையை தவிர்த்து எழு மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. கோவையைச் சேர்ந்தோருக்கு வரும் 12-ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக ஐந்து ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விண்ணப்பங்கள் கொடுக்கப்படாத நிலையில் எவ்வாறு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? எந்த அறிவிப்பும் இல்லாமல் நேற்று தான் விருது வாங்குவோர் பட்டியல் வெளியிடபட்டன. எதன் அடிப்படையில் இது வழங்கப்படுகிறது? இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறி கொடுக்கப்படும் இந்த விருதுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...