கோவை: லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை நேற்று திடீரென சாய்ந்ததால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை: லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை நேற்று திடீரென சாய்ந்ததால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அவ்வப்போது சாய்ந்து விழுந்தன.
இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் லட்சுமி மில்ஸ் பகுதியிலிருந்து புலியகுளம் செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகை ஒன்று திடீரென சாய்ந்தது. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் இருந்த தனியாருக்கு சிந்தமான விளம்பர பலகை விழும் நிலையில் இருந்தது. இதனால் அங்கு பேருந்துக்காக காத்திருப்பவர்கள் பீதியுடனேயே அந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சூழலில், தற்போது விளம்பர பலகை சரிந்துள்ளது. தற்போது வரை அது அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
