லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தத்தில் விளம்பர பலகை சரிந்து விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை நேற்று திடீரென சாய்ந்ததால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.


கோவை: லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த விளம்பர பலகை நேற்று திடீரென சாய்ந்ததால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



கோவையில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அவ்வப்போது சாய்ந்து விழுந்தன. 

இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையில் லட்சுமி மில்ஸ் பகுதியிலிருந்து புலியகுளம் செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகை ஒன்று திடீரென சாய்ந்தது. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதே பகுதியில் இருந்த தனியாருக்கு சிந்தமான விளம்பர பலகை விழும் நிலையில் இருந்தது. இதனால் அங்கு பேருந்துக்காக காத்திருப்பவர்கள் பீதியுடனேயே அந்த பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வந்தனர்.

இந்த சூழலில், தற்போது விளம்பர பலகை சரிந்துள்ளது. தற்போது வரை அது அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...