கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

கோவை: கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் பெண்கள் புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

 

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மற்றும் இந்திய புற்றுநோயியல் கூட்டமைப்பும் இணைந்து, கோவையில் ‘பெஸ்ட் ஆப் அஸ்கோ-2018’ (BEST OF ASCO 2018) என்ற மாநாட்டையும் பெண்களை தாக்கும் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியையும் நடத்தியது.

இந்த வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி என்.ஜி.பி கலை அறிவியல் கல்லுாரியில் தொடங்கி கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வரை நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை தலைவர் டாக்டர்.நல்லா.ஜி.பழனிசாமி தொடங்கி வைத்தார். 



இதில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மருத்துவர்கள், புற்றுநோயை வென்றவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக ‘பெஸ்ட் ஆப் அஸ்கோ-2018’ மாநாட்டினை அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டினை அமெரிக்க புற்றுநோய் சொசைட்டி அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. 

இதில், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய சிகிச்சை முறைகள், தற்போதுள்ள நவீன சிகிச்சை முறைகள், வரும் முன் தடுப்பு முறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றன. புற்றுநோயை வரும் முன் காக்கும் முறைகள், வந்த பின்னர் அதற்கான அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...