நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

உதகை நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை வேண்டுமென்றே இழுத்து மூடும் வேலைகளில் பா.ஜ.க., அரசு செய்து வருகிறது. அதைத் தட்டி கேட்க தைரியம் இல்லாத அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.
2 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு ராணுவ பொருட்களை உற்பத்தி செய்து வரும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையை செப்டம்பர் மாதத்திற்குள் இழுத்து மூடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அ.தி.மு.க.,வின் இரண்டு எம்.பி.,க்களும் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
எனவே, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்தொழிற்சாலை தொடர்ந்து நடத்த பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் அதி நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தமிழக ஆட்சியாளர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

உதகை நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை வேண்டுமென்றே இழுத்து மூடும் வேலைகளில் பா.ஜ.க., அரசு செய்து வருகிறது. அதைத் தட்டி கேட்க தைரியம் இல்லாத அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.
2 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு ராணுவ பொருட்களை உற்பத்தி செய்து வரும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையை செப்டம்பர் மாதத்திற்குள் இழுத்து மூடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அ.தி.மு.க.,வின் இரண்டு எம்.பி.,க்களும் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
எனவே, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்தொழிற்சாலை தொடர்ந்து நடத்த பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் அதி நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தமிழக ஆட்சியாளர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.