தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி: உதகையில் ஆ.ராசா பேட்டி

நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.



உதகை நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை வேண்டுமென்றே இழுத்து மூடும் வேலைகளில் பா.ஜ.க., அரசு செய்து வருகிறது. அதைத் தட்டி கேட்க தைரியம் இல்லாத அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.

2 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு ராணுவ பொருட்களை உற்பத்தி செய்து வரும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையை செப்டம்பர் மாதத்திற்குள் இழுத்து மூடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அ.தி.மு.க.,வின் இரண்டு எம்.பி.,க்களும் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

எனவே, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்தொழிற்சாலை தொடர்ந்து நடத்த பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.



அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் அதி நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தமிழக ஆட்சியாளர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...