பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போராடி மீட்டது தீயணைப்புத்துறை

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னும் பகுதியில் பவானியாற்றில் நேற்று குளிக்க சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுழலில் சிக்கி ஆற்றின் மறு கரையில் கரையேறியுள்ளனர். 

ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல மணி நேரமாக ஆற்றைக்கடந்து வர இயலாமல் போராடினர். நேரம் ஆக-ஆக இருள் சூழ தொடங்கியதால் அச்சத்தில் ஆழ்ந்த மாணவர்கள் பலத்த சப்தம் எழுப்பியும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தும் உதவி கோரினர். 

இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மாணவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

மாணவர்கள் இருந்த ஆற்றின் மறுகரை வனப்பகுதி என்பதாலும், இருள் சூழ்ந்த பின்னர் யானைகள் அங்கு நீர் அருந்த வந்ததாலும் அவர்களை மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்க முடிவெடுத்தனர். ஆற்றின் வேகம் ஓரளவு குறைந்தவுடன் பரிசலின் உதவியோடு பிரவீன், கிள்ளிவளவன், முத்துகிருஷ்ணன், விவேக், கார்த்தி, இளமாறன், லெனின், அஜய்பிரவீன், தினேஷ்ராஜ், பிரனிஸ், ராஜ்குமார் என்ற பதினோரு மாணவர்களையும் இரவு பத்து மணியளவில் பத்திரமாக மீட்டனர். 



பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், அணையின் நீர் திறக்கப்படும் முன் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...