குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமாரனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கௌதமன் என்பவர் மகன் திலிபன் (17). இவர், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார். அதேபகுதியில், வசிக்கும் லாரி ஓட்டுநர் நல்லதம்பி என்பவரது மகன் பரத் (12) அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். 

விடுமுறை தினமான இன்று திலிபன், பரத் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து மாணிக்காபுரம் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நால்வரும் நீரினுள் இழுக்கப்பட்டுள்ளனர். இதில், பயந்து போன சிறுவர்கள் அலறியுள்ளனர். அவர்ளது சத்தத்தைக் கேட்ட அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். ஆனால், அதற்குள் திலிபனும், பரத்தும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...