கோவை: கோவை மாவட்டம் மாங்கரை அருகே வனவிலங்கினால் சேதமடைந்த மின்கம்பத்தை மின்சாரத்துறை ஊழியர்கள் மாற்றம் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் மாங்கரை அருகே வனவிலங்கினால் சேதமடைந்த மின்கம்பத்தை மின்சாரத்துறை ஊழியர்கள் மாற்றம் செய்தனர்.

மாங்கரை அடுத்த ஆனைகட்டி அருகே உள்ள தூமனூர் செம்புக்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த வயரினை காட்டெருமை உரசியுள்ளது. இதில், காட்டெருமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மின்கம்பமும் சேதமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, காட்டெருமையைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மண்ணில் புதைத்தனர்.
இதனிடையே, சேதமடைந்த மின்கம்பத்திற்குப் பதிலாக, வனவிலங்களால் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உயரமான மின்கம்பம் அந்தப் பகுதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாங்கரை அடுத்த ஆனைகட்டி அருகே உள்ள தூமனூர் செம்புக்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த வயரினை காட்டெருமை உரசியுள்ளது. இதில், காட்டெருமை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. மேலும், மின்கசிவு ஏற்பட்டு, மின்கம்பமும் சேதமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, காட்டெருமையைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மண்ணில் புதைத்தனர்.
இதனிடையே, சேதமடைந்த மின்கம்பத்திற்குப் பதிலாக, வனவிலங்களால் பாதிப்பு ஏற்படாத வண்ணம், உயரமான மின்கம்பம் அந்தப் பகுதியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.