அரசு பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவ இடம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜுலை 1-ம் தேதி தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 10 வரை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அரசுப் பள்ளிகளைக் காட்டிலும், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கே அதிகம் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயின்ற ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்திருப்பது அனைவரிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் மு. பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த சத்துணர்வு ஊழியர் ரங்கராஜன் என்பவரின் மகன் அலெக்ஸ் பாண்டியன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1.111 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றார். அதன் விளைவாக, நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட அலெக்ஸ் பாண்டியனுக்கு, திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி., அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...