நீலகிரி ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரயில்பெட்டி அறிமுகம்

நீலகிரி: நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டி நீலகிரியில் சீசன் சமயங்களில் இயக்கப்படும் ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டி நீலகிரியில் சீசன் சமயங்களில் இயக்கப்படும் ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நான்கு பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 200 இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பு கட்டணம் ரூ. 120-ம், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 30-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சீசன் சமயங்களில், வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டணத்துடன் ப்ரீமியம் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இதில், முதல் வகுப்பு கட்டணம் 1,100 ரூபாயும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 



சுமார் பத்து மடங்கிற்கும் மேலாக சிறப்பு ரயிலில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள், எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வழக்கமான பெட்டிகளிலேயே பயணம் செய்தனர். இது அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு பிரிமீயம் ரயிலில் பழைய இருக்கைகளை மாற்றிவிட்டு புதிய புஷ்பேக் இருக்கைகள் (28 இருக்கைகள்) பொருத்தப்பட்ட பெட்டி திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமலையில் தயார் செய்யப்பட்டது. லக்கேஜ் வைக்க வசதி, இருக்கையில் அமர்ந்து சாப்பிடவும், தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கான ஸ்டேண்டு என இந்த புதுப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் பெட்டி தற்போது திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்துள்ளது. கிரேன் மூலம் இறக்கப்பட்ட இந்த சிறப்பு மலை ரயில் பெட்டி விரைவில் பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...