ஈஷா கிராம மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 



ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஆலாந்துறையில் ஈஷா கிராம மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது, இலவச மருத்துவ முகாம்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ முகாமில், பெங்களூருவில் அமைந்துள்ள பிரபல நரம்பியல் மருத்துவமனையான NIMHANS நரம்பியல் வல்லுநர் டாக்டர். K.பாலாஜி கலந்துகொண்டார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல்மருத்துவம் ஆகியவற்றிற்கான சிகிச்சை வழங்கப்பட்டது. பல் சார்ந்த நோய்களுக்காக 43 பேரும், நரம்பு சார்ந்த நோய்களுக்காக 12 பேரும், பொது நோய்களுக்காக 145 பேரும் இந்த இலவச முகாமில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர். மேலும், காய்ச்சல், சளி, தலைவலி போன்ற பொதுவான நோய்களுக்கும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...