ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சாண்டிநல்லா பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில். இத்தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவு நீர் பைக்காரா அணையில் கலந்து வந்தது. இதனால். பைக்காரா குடிநீர் திட்டத்தின் கீழ், அந்த நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாமலும், மீறிப் பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை இந்தத் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் தொழிற்சாலை நிர்வாகம் எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 28-ம் தேதி தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இத்தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி தொழிலாளர்களை வெளியேற்றி உள்ளதால் சுமார் 400 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதாகக் கோரி இன்று உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...