பேருந்து சேவை தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்த அமைச்சர் : பயணிகள் அதிருப்தி

கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர்.


கோவை: புதிய பேருந்து சேவைகளின் தொடக்க விழாவிற்கு தாமதமாக வந்ததால், உக்கடம் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அமைச்சர் மீது அதிருப்தியடைந்தனர். 



கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று 25 புதிய பேருந்து தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைசார் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இவ்விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு விழா நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அதிகாரிகள், மக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பயணிகள் என பல்வேறு தரப்பினரும் 10 மணிக்கே குவியத் தொடங்கினர். அதன்பின், சட்டமன்ற உறுப்பினர்களும் வந்துவிட்ட நிலையில், அமைச்சர் மதியம் 12.45 மணிக்கு வந்தார். 



அமைச்சர் வருகையையொட்டி 3 மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் காத்திருந்தனர். பயணிகளும் புதிய பேருந்துகளில் பயணிக்க ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் பலமணி நேரம் ஆனதால் கடுப்பாகினர்.

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், "அமைச்சர் அவர்களுக்கு நிறையப் பணிகள் இருக்கும். அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நேரம் ஒன்று நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் தாமதமாக தான் வருகிறார்," என்றார்.

பயணி ஒருவர் கூறுகையில், "3 மணி நேரமாக புதிய பேருந்தில் பயணிக்கலாம் என காத்திருந்தேன். அமைச்சர் வருகையில் தாமதம்தான் இதற்கு காரணம் என்றார். உக்கடம் பேருந்து நிலையத்தின் உள்ளே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், சில நகர பேருந்துகள் பல மணி நேரம் பயணிகளை வெளியே நிறுத்தி தான் ஏற்று சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...