கோவையில் புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 25 புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து 25 புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.



கடந்த 3-ம் தேதியன்று தமிழகப் போக்குவரத்துத் துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட 515 புதிய பேருந்துகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அவற்றில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குப் பேருந்துகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒதுக்கி வைக்கப்பட்டன. கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு முதல்கட்டமாக 25 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. 



இந்த நிலையில், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் புதிய பேருந்துகளின் சேவையை நகராட்சி நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு செயலாக்கத் திட்டத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமனி தொடங்கி வைத்தார். இந்தப் பேருந்துகள் உடுமலை, பழனி, திண்டுக்கல், சிவகங்கை, நத்தம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக டவுன் பேருந்து இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமைச்சர் எஸ்.பி., வேலுமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- புதிதாகக் கேட்கின்ற திட்டங்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சாலைகள் அனைத்தும் புனரமைக்கப்படுகின்றன. மேம்பாலம் உட்பட திட்டங்கள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகின்றன. மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் கூடிய விரைவில் தொடங்கப்படும். குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்படுகின்றன. பேருந்தில் குறைகூறும் அளவிற்கு எந்தக் குறைபாடும் இல்லை. டி.டி.வி., தினகரன் மட்டும் அல்ல, யார் வந்தாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் குறுக்கு வழியில் செல்ல முயற்சிக்கின்றனர். 

டி.டி.வி., தினகரன் எப்படிக் கூட்டத்தை கூட்டுகிறார் என்று அனைவருக்கும் தெரியும். அதை விமர்சிக்க விரும்பவில்லை. நடத்துநர் இல்லா பேருந்து வந்ததன் மூலம் ஆட்குறைப்பு என்பது நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும். நடத்துநர் இல்லாப் பேருந்து விவகாரம் போக்குவரத்து சட்டத்திற்கு எதிரானது என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளதை, போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும், முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். சூயஸ் குடிநீர் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம், என்றார்.

இதுவரை சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு, இந்தத் திட்டத்தில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக உள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். இதனிடையே, 'பாதுகாப்பு அம்சங்கள், இருக்கை வசதிகள் ஆகியவை இந்தப் புதிய பேருந்துகளில் சிறப்பாக உள்ளது' என பயணிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...