பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் சி.எஸ்.ஐ.ஆர்., மருத்துவமனை மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நறுமண பயிர்களில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், லெமன்கிராஸ் என்று அழைக்கப்படும் நறுமண தாவரத்தில் இருந்து நறுமண எண்ணெய் பெறப்பட்டு, சோப், வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும், லெமன்கிராஸ் நறுமண தாவரத்தை எவ்வாறு பயிரிடுவது, பராமரிப்பது, அறுவடை செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

லெமன்கிராஸ் நறுமண தாவரம் இந்தியா முழுவதும் பெருமளவு பயிரிடப்படுவதாகவும், 3 முதல் 4 அறுவடையின் மூலம் வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 120 கிலோ நறுமண எண்ணெய் பெறலாம். வருடத்திற்கு நறுமண எண்ணெயின் மூலம் ஒரு ஏக்கரில் ரூ. 1,50,000 வரை பெறலாம் என முகாமில் தெரிவித்தனர். 



இம்முகாமில் திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை வனக்கோட்டத்திற்குட்பட்ட காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, பூச்சிகுத்தான்பாறை, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி போன்ற செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...