திருப்பூரில் பட்டப்பகலில் சாலையோரங்களில் செல்லும் சாய்க்கழிவு நீர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் ஏராளமான சாய ஆலைகள் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆற்றோரங்களில் அனுமதி பெறாமல் செயல்படும் சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுகின்றனர். 

இதனால் ஆற்று நீர் எவ்வித உபயோகமின்றி பாழாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அங்கேரிபாளையம்-நல்லாற்றின் ஓரமாக செயல்படும் சாய ஆலைகள் உள்ள பகுதியில் பட்டப் பகலிலேயே சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.



ஆற்றின் ஓரமாகவே சாயக்கழிவு நீர் சென்ற காரணத்தால், பகல் நேரத்திலேயே சாய ஆலையினர் ஆற்றில் கழிவு நீரை கலக்க துணிந்து விட்டனர் என கூறிய பொதுமக்கள், இதுபோன்ற அனுமதி பெறாமல் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் போன்ற நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடானது தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆற்றில் சாய்க்கழிவு நீரை கலக்கும் செயலை தடுக்க முடியும் என்றும், நல்லாறு, நொய்யலாறு போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...